Wednesday, May 14, 2025

Latest Posts

பொசன் போயாவை முன்னிட்டு பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.