அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் பங்கேற்றுள்ளார்.
தனி நபர்களை குறிவைத்து அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு மொட்டு கட்சி தரப்பினர் பிரதமருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
மொட்டு கட்சி தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தனது உருவாக்கம் அல்ல என பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பிரதமர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவையும் பார்த்தபோது விஜேதாச ராஜபக்ஷ தரையை பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க 21வது திருத்தச் சட்டத்தை சிறிதும் விரும்பாத கொள்கையை கடைப்பிடித்து வருவதையே இது காட்டுகிறது.
எளிமையாகச் சொன்னால், இது “ஆறு முறை பிரதமராகவும், ஒரு முறை நிறைவேற்றுத் தலைவராகவும் இருப்பதற்கு ஆசை போல?”