ரணில் – திலித் இரகசிய சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திலித் ஜயவீரவின் வீட்டிற்கு ஜனாதிபதி திடீரென வந்துள்ளார். இந்த நாட்களில், திலித் கொழும்பில் உள்ள பிரதான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

ஜனாதிபதி ரணில் எந்தவித முன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி, மிகவும் சாதாரண உடை அணிந்து, மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் மட்டுமே இந்த வீட்டிற்கு வந்தார்.

இதையறிந்த மக்கள் திலித்தை பார்க்க ஜனாதிபதி வந்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் ஏற்கனவே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சர்வஜன பல கூட்டணியின் தலைவர்கள் குழுவொன்று திலித்தின் வீட்டில் இருந்துள்ளது.

எனவே சுமார் ஒரு மணித்தியாலம் இவர்களுடன் ஜனாதிபதி மிகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இவ்வாறான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள உடன்பாடு ஏற்பட்டது. அவர்களில் சிலருக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளும் கிடைக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி சர்வஜன பல கூட்டணியை உருவாக்கிய திலித் அணிந்திருக்கும் உரச்சக்கரமாலையை ஜனாதிபதி ரணிலின் தோளில் சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கேட்கப்படுகிறது.

ஆச்சர்யப்படுவதற்கில்லை, தேர்தல் நேரம் நெருங்கிவிட்டது…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...