சம்பிக்கவை வளைக்கச் சஜித் அணி பிரயத்தனம்

Date:

குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து வருகின்றது.

இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அக்கட்சியில் இருந்து விரைவில் வெளியேறத் திட்டமிட்டுள்ளார். ராஜித சேனாரத்னவும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இந்நிலையிலேயே, இவ்விருவரின் இடைவெளியை நிரப்பும் வகையிலும், சிங்கள, பௌத்த வாக்கு வங்கியைக் குறிவைத்தும் சம்பிக்க ரணவக்கவுக்கு சஜித் தரப்பு வலைவிரித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலின் கீழ்தான் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டார். அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...