ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ.3,912.3 பில்லியன் இருப்பு

Date:

2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் மூலம் அந்த நிதியத்தின் 1958/ 15 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அலுவல்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்துவதற்கும் வேறு வேலைத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதே வேளை, ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செய்வோர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதற்கான தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் தனித்தனியாக உடனடியாக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...