சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு – அரசியலமைப்புக்கு முரணானது!

Date:

இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சட்ட மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டத்தின் நீதியை நிறைவேற்றுவதற்கு சட்ட மா அதிபருக்கு தனித்துவமான பொறுப்புகள் இருப்பதாகவும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்ட மா அதிபர் ஒருவரின் சேவை நீடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.

இன்னும் 34 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சட்ட மா அதிபரின் பதவிக்காலத்தை ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு நீடித்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்துக்குப் பேரிடியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....