புதிய மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

Date:

மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கோரிக்​ை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.

தினேஷ் வீரக்கொடி பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும், வங்கிகளின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

நந்தலால் வீரசிங்கவுக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கை மத்திய வங்கி அதனை நிராகரித்துள்ளது.

எனினும் பிரதமரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை. அமைச்சு இலாகாக்களை வர்த்தமானியில் வெளியிடும் போது இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...