மிஹிந்தலை தேரரின் முறைப்பாடு – பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

Date:

மிஹிந்தலை விகாரை பொசன் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மிஹிந்தலை விகாரையின் தலைவர் கலாநிதி வளவ ஹங்குனவெவே தம்மரதன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பொசன் பண்டிகைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிஹிந்தலைக்கு வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில், மிஹிந்தலை விகாரை பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...