போர் நிறுத்தத்திற்கு புடின் அழைப்பு

Date:

உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் மட்டுமே அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி புடின் இதை குறிப்பிட்டார், மேலும் உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கிரெம்ளின் ‘தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக உள்ளது’ என்றார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி புட்டினால் உக்ரைனிடம் நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்றும், அவரே தொடங்கிய போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் திறன் அவருக்கு உள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...