நாடளாவிய ரீதியில் எண்ணெய் வரிசைகளில் குண்டர்கள் ஆட்சி

Date:

நாடளாவிய ரீதியில் எரிபொருள் வரிசையில் குண்டர்கள் ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள குண்டர்கள் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

“மிக நீண்ட எண்ணெய் வரிசைகள் இந்த எண்ணெய் வரிசைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எண்ணெய் வரிசைகள் எங்கும் நிறைந்துள்ளன. சில குண்டர்கள் வரிசைகளின் அதிகாரத்தை கையகப்படுத்துவதாகவும் அல்லது வற்புறுத்துவதாகவும் செய்திகள் உள்ளன.
இந்த வன்முறைச் செயல்களில் அரச அதிகாரம் பெற்ற அரசியல் வாதிகளின் அடியாட்களும், அரசியல்வாதிகளும், அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் அனைத்து வரிசைகளிலும் இந்த குண்டர்கள் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எமக்கு உள்ளது.

நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...