மஹாபொல தாமதத்தால் மாணவர்கள் தற்கொலை வரை செல்கின்றனர்

0
144

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கான மஹபொல கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறினார்.

இந்நிலைமையினால் மாணவர்களும் தற்கொலை வரை சென்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டார்.

சுமார் 15,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உடனடியாக பணத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மஹாபொல புலமைப்பரிசில் நிதியில் உள்ள நிதி உரிய கொடுப்பனவுகளைச் செய்வதற்குப் போதுமானதாக இல்லாததால், திறைசேரியில் இருந்து தேவையான ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here