மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அதனை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலத்தில் காணப்படும் உள் ஆடை மற்றும் இதர ஆடையின் அடிப்படையில் இந்த உடல் பகுதி சீன நாட்டவரினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட உடல் பகுதி உடல் கூற்று ஆய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.