STF துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

0
286

எம்பிலிப்பிட்டிய, பனாமுர, வெலிக்கடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

STF அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.அவர் முன்னாள் ராணுவ வீரர் என பொலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here