Monday, May 20, 2024

Latest Posts

இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மண்டபம் பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  5 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அத்துடன் அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை  மயிலட்டி கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.