கிழக்கு அபிவிருத்தி புரட்சியை புத்தகமாக அச்சிட்டு ஜனாதிபதி ரணிலிடம் நேரில் கையளித்த ஆளுநர்!

0
184

கிழக்கு மாகாணத்தில் 2023 மே 17 முதல் 2024 மே 18 வரையிலான தனது நியமனத்திலிருந்து 1 வருட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை புத்தகமாக அச்சிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இந்த விரிவான புத்தக அறிக்கையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்திற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கடின உழைப்புடன் ஆற்றிய சேவையில் கவரப்பட்ட ஜனாதிபதி ஆளுநரை மிகவும் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here