எஸ்பிபி சரண் – சோனியா அகர்வால் 3ம் திருமணம்

Date:

சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார். இது பல யூகங்களுக்கு வழி வகை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த புகைப்படம் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டன மற்றும் ரசிகர்கள் இரு பிரபலங்களின் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப், அஞ்சலி உள்ளிட்டோர் உள்ளனர். அதில் வெப் சீரிஸ் மற்றும் பிலிம் புரடக்ஷன் என ஹேஷ் டேக்கும் பதிவிட்டுள்ளார். இதன்படி இந்த போட்டோஸ் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகை சோனியா அகர்வால், செல்வராகவனை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...