நுவரெலியா பொது மலசலக்கூடத்திலிருந்துஇரு நாட்களில் 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

Date:

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து ஆண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு ருவன்எலியாவைச் சேர்ந்த மொஹமட் இம்தியாஸ் பாசில் (வயது 72) என்ற வயோதிபரின் சடலமும், இன்று காலை பொகவந்தலாவையைச் சேர்ந்த கல்பொகே ஹேவாகே அஜித் நிஸ்ஸங்க (வயது 51) என்ற குடும்பஸ்தரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும் மலசலகூடத்தில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள், 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளமையை  உறுதிப்படுத்தினர்.

இரண்டு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...