நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – அனுர

Date:

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஜே.வி.பி தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த தருணத்தில் நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாமல் எந்தவொரு நாடும் இலங்கைக்கு ஆதரவை வழங்காது எனவும், எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதி நடவடிக்கைகளுக்கு நாட்டின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியே காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த ஆட்சியில் நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க 05 அத்தியாவசிய விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என ஜே.வி.பி தலைவர் கூறுகிறார்.

வெளிநாட்டுக் கடனைப் பெறுதல், கடனைப் பின்னர் செலுத்துதல், வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பணம் சம்பாதித்தல், சுற்றுலா மூலம் பணம் சம்பாதித்தல், நுகர்வு முறைகளில் மாற்றம் என்பன இந்த ஐந்து விடயங்களாகும் என அனுர திஸாநாயக்க இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...