நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த இந்தக் கோரிக்கை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில் மேலதிக நீதவான் தடை உத்தரவைப் பிறப்பிக்க மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனைக் கையாளும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி கோதா கோ கிராமப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு போராட்ட