ஜனாதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும்

Date:

ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே குறிப்பிடுகின்றார்.

தலைமறைவான இடத்தில் இருந்து நாளைய தினம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்க முறையை கவிழ்த்து விடுங்கள்” என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சங்கம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்பு நோக்கி பேரணியாக சென்றதுடன், கோட்டை ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலான உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். .

எனினும், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று இரவு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...