ஜனாதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும்

Date:

ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே குறிப்பிடுகின்றார்.

தலைமறைவான இடத்தில் இருந்து நாளைய தினம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்க முறையை கவிழ்த்து விடுங்கள்” என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சங்கம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்பு நோக்கி பேரணியாக சென்றதுடன், கோட்டை ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலான உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். .

எனினும், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று இரவு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...