ஜனாதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும்

Date:

ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே குறிப்பிடுகின்றார்.

தலைமறைவான இடத்தில் இருந்து நாளைய தினம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்க முறையை கவிழ்த்து விடுங்கள்” என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சங்கம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்பு நோக்கி பேரணியாக சென்றதுடன், கோட்டை ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலான உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். .

எனினும், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று இரவு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...