முடிவை இறுதி நேரத்தில் மாற்றுவாரா ‘ரிவஸ் மன்னன்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது “மீளப்பெற்ற” ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு காலம் ஊரடங்குச் சட்டம், பல தடவைகள் வாபஸ் பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானங்கள் தலைகீழாக மாறுவது உலக சாதனையாகக் கூட இருக்க முடியும்.

தற்போது அவர் பதவி விலகுவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அது நாளை மறுநாள் 13ம் திகதியாகும். நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதி பதவி இருக்க எந்த அவகாசமும் இல்லை. ஆட்சியில் அவருக்கு இருந்த தார்மீக சக்தி ஏற்கனவே அவரது காலடியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தனது ராஜினாமா குறித்து சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் தனது உடன்பாட்டை தெரிவித்தாரே தவிர இன்னும் எழுத்துமூலம் பதவி விலகவில்லை.

எனவே, ‘ரிவஸ் மன்னன்’ நாளை மறுநாள் தனது ராஜினாமா முடிவை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...