பிரதான வீதிகளில் 260ற்கும் அதிகமான பாலங்கள் மோசமான நிலையில்

Date:

நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் குறிப்பிட்டார்.

மேலும், 135 பாழடைந்த பாலங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை புனரமைப்பதற்கு 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாலம் புனரமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒதுக்கீடுகள் கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சர்தா வீரகோன் தெரிவித்தார்.

அண்மையில் பொலன்னறுவை – மானம்பிட்டிய கொட்டாலேய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலம் குறுகலாக உள்ளதால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...