முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன் முன்பிணையில் விடுவிக்கக் கோரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.