பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு – அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன

Date:

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகளால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஏற்கனவே நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து வேட்பாளர்கள் ஆஜராக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளையும் நாளை மறுதினமும் பல வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாராளுமன்றம் மிகவும் சூடுபிடிக்கும். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்கள் இரு குழுக்களாக பிரிந்து கிடப்பதால் வெற்றி வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி வரையில் முன்கூட்டிய முடிவுகளுக்கு வர முடியாது.

பொதுஜன பெரமுனவின் செயலாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார், ஆனால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...