மொட்டு – ஜனாதிபதி முறுகல் காரணமாக எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

Date:

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது போனால், அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 22வது அரசியலமைப்பு திருத்தம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் எம்.பி.நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு சதியே என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ள பின்னணியில், இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்காக நிறைவேற்றுவது ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கு சவாலாக உள்ளதாக வலேபொட தெரிவித்தார்.

இந்த நிச்சயமற்ற தன்மையை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி தமக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு செயற்படுவதாகவே தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை நாட்டின் அரசியலையே மாற்றமடையச் செய்யும் நிலைமையை இந்த நிலைமை உருவாக்கியுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...