ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம்

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை 17ம் திகதி தேர்தலை அறிவிக்கும் நிலையில் தான் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் 17ம் திகதி அதாவது அதிகாரம் வழங்கப்பட்ட முதல்நாள் அன்று நான் தேர்தலிற்கான அறிவிப்பை வழங்கியிருந்தால் செப்டம்பர் 17 ம் திகதி தேர்தலை நடத்தியிருக்கவேண்டும், அன்றைய தினம் போயா என்பதால் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கலாச்சார காரணங்களிற்காக தேர்தலை போயா தினத்தன்று நடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் மறுநாள் அதனை நடத்துவது சாத்தியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்..

இதன்காரணமாக வேட்புமனுதாக்கல் செய்யும் தினத்தை அடுத்தவாரம் அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவாரம் அறிவிக்கவுள்ளதாக எனஅவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...