உடப்பு காளி சிலையில் தங்க கண்களை நோண்டிய கோவில் பணியாளர் கைது

Date:

உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை  கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள் செயற்பட்ட போது, ​​அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து கும்பூ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று அவர் இந்த தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தேங்காய் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் எனவும், சீசன் காலங்களில் ஆலயங்களில் மேளம் அடிப்பவர் எனவும், ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களின் போது வேல் பூட்டி கயிற்றில் தொங்கி ஊர்வலம் செல்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...