Saturday, July 27, 2024

Latest Posts

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி குறித்த அதிர்ச்சித் தகவல்

கொழும்பு அலுவலகங்களின் பணிப்பெண்கள் சிலரை வைத்து பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் அலுவலக ஊழியர்கள் ஆவர்.
இந்த இடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு மேலதிக வருமானம் ஈட்டி வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சில பெண்கள் இந்த இடத்தில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வதாகவும், பகலில் இந்த இடம் வெற்றிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணுக்கு, 9 ஆயிரம் ரூபாயும், இரவைக் கழித்தால், 30 ஆயிரம் ரூபாயும் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.