உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் குறித்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்,பிரதி தவிசாளர் ராஜதுரை, சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வை செய்வதோடு, மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்குமாறு இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...