நேபாள விமானம் புறப்படும் போது விபத்து – அனைவரும் பலி

Date:

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் (Saurya Airlines) சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது.

விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட உடன் விமானத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புப் படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் விமான விபத்து அவ்வப்போது ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள போக்காரா விமான நிலையத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியதால் அந்த விபத்து ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...