ரணில் மீது அபரீத நம்பிக்கை கொண்டுள்ள மொட்டு கட்சி

Date:

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

“இந்த நாட்டிற்கு ராஜபக்சவின் நெருக்கத்தை நம்பிய மக்களுக்கு உண்மை மீண்டும் வெளியில் வந்து அதை நிரூபிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள் என்றும் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் எம்முடன் நிற்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். ராஜபக்சக்கள் இந்த நாட்டில் தேசிய சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இன்று அந்த தேசிய பிரதிநிதித்துவமும் தேசிய கருத்தும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நாம் ஏற்படுத்த வேண்டும், ஜனாதிபதி இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...