தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் – லலித் பதிநாயக்கவுக்கு வழங்கப்பட்டது பொறுப்பு

Date:

வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரை பொலிஸ் நிர்வாகத்தின் பணிகளை கண்காணிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

புதிய பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் ஆராய தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பதவி நீக்கப்பட்ட நிலையில், லலித் பதிநாயக்க பொலிஸ் துறையின் அடுத்த உயர் அதிகாரியாகக் கருதப்படுகிறார்.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு அவரை அண்மையில் விடுதலை செய்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...