நாம் அன்று கூறியது இன்று உறுதியானது!தம்மிக்க பெரேராவுக்கு வேட்புமனு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி ஆகஸ்ட் 7ம் திகதி அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவார் என ஒன்பது மாதங்களுக்கு முன்னர், டிசம்பர் 18, 2023 அன்று லங்கா நியூஸ் வெப் அறிவித்தது.

இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்த தம்மிக்க பெரேரா பல துறைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளைச் செய்து அதன் மூலம் பொருளாதாரத்தின் பல துறைகளில் அபாரமான அறிவையும் அனுபவத்தையும் பெற்றவர்.

இதில் வங்கி மற்றும் நிதித்துறை, ஆடைகள், தொழில்துறை பொருட்கள், விவசாய பொருட்கள், சுற்றுலா போன்றவை அடங்கும்.

மேலும், இலங்கையின் கல்வியை நவீனமயப்படுத்தவும், கல்வித்துறைக்கு விசேட கவனம் செலுத்தி சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தவும் DP கல்வித் திட்டத்தின் ஊடாக அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது மற்றும் DP கல்வித் திட்டமானது பாடசாலைக்கான ஆசியாவின் முதலிட டிஜிட்டல் தளமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேல். மேலும், இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 145 IT வளாகக் கிளைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. இந்த தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் மூலம் ஆன்லைன் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 250000ஐத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வேட்பாளர்களில் தம்மிக்க பெரேரா மாத்திரமே இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான குறிப்பிட்ட, நடைமுறை வேலைத்திட்டத்துடன் கூடிய செயற்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...