Sunday, September 22, 2024

Latest Posts

வரவிருக்கும் எரிபொருள் இருப்பு குறித்து அமைச்சர் காஞ்சனாவின் அறிவிப்பு

இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், ஆகஸ்டு 12-14 ஆம் திகதிகளுக்கு இடையில் விமான எரிபொருளின் முதலாவது ஏற்றுமதி இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு டீசல் கப்பல் மற்றும் பெற்றோல் கப்பலுக்கு முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.