அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Date:

தற்போது இலங்கையின் சுகாதார கட்டமைப்பில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார அமைச்சு 862 அத்தியாவசிய மருந்துகளை இனங்கண்டுள்ளதாகவும் கடந்த வருடம் 250 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய மட்டத்தில் 52 மருந்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த 52 மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் நாட்டில் இருப்பதாகவும், இவற்றில் சில மருந்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் வைத்தியசாலைகளில் உள்ளதாகவும், மருந்து தட்டுப்பாடுகள் வரும் காலங்களில் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....