ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

0
66

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயற்குழு கூடி, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்றும், முழு உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் முழு ஐக்கிய தேசியக் கட்சியும் முழுமையாகச் செயற்படுகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here