ஏ9 வீதி மாங்குளம் விபத்தில் மூவர் பலி

Date:

ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்பக்க லொறியின் சாரதி லொறியில் இருந்து கீழே இறங்கியதில் இரண்டு லொறிகள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும் முன் இருக்கையில் பயணித்த நபரும் உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முல்லேரிய புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் வேனில் பயணித்த மூன்று பெண்களும் லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...