Wednesday, May 22, 2024

Latest Posts

தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு

6 மாத காலத்திற்கு 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆகஸ்ட் 18 முதல் 6 மாத காலத்திற்கு மட்டும் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய மின்சாரம் கொள்முதல் தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை நடத்தப்படும்.

கொத்மலை பொல்பிட்டிய 220 kv பாதையானது 31 ஆகஸ்ட் 2024 க்கு முன்னர் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்த மின்சாரத்தை குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் வாங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.