இலங்கை மீனவர்களுக்கு கொரியாவில் மீன்பிடிக்க வேலைவாய்ப்பு

0
80

கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மனுஷ நானயக்கார மனிதவள திணைக்களத்தை பார்வையிடச் சென்றபோது, ​​கொரிய மீன்பிடித் துறையில் நாட்டுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அந்தத் திணைக்களத்தின் நாட்டுப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here