சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்?

0
153

ஐக்கிய மக்கள் கூட்டணி தனது அமைச்சரவையை தற்போது பெயரிட உள்ளதாக இணைய சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் கட்சியின் புதிய உறுப்பினர்களும் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில வாரங்களுக்கு முன்னர் அவர் பல தூதுவர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

டலஸ் அழகப்பெருமவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், சம்பிக்க ரணவக்கவுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியும், நிதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

சிலர் கட்சியை விட்டு விலகியமைக்கான தீர்வாக மேலும் பல அமைச்சுப் பதவிகளை நியமிக்க கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானங்கள் குறித்து கட்சியின் ஒரு குழுவினர் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா வகித்து வந்த கட்சியின் தலைவர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால், அந்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

அதற்கு இம்தியாஸ் பாக்கீர் மார்கார் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், இருவருக்குள்ளும் ஏதாவது விரிசல் ஏற்படும் என்ற எண்ணத்தில் எவரும் அதற்கான கருத்தை தெரிவிக்கவில்லை.

ஹரின் பெர்னாண்டோவினால் காலியான தேசியப்பட்டியல் எம்.பி.க்கு இதுவரை கட்சியால் யாரையும் நியமிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here