நாமல் ராஜபக்ஷ படுதோல்வி அடைவார் – எஸ்.பி.திசாநாயக்க

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, படுதோல்வி அடைவார் என நுவரெலியா மாவட்டக் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன கூட்டுறவு விழா மண்டபத்தில் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதியின் கூட்டுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரான. தம்மிக்க பெரேரா பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாராகி, அந்த பணத்திற்காக பசில் ராஜபக்ஷ பேராசையுடன் உழைத்தார்.

இத்தேர்தலுக்கு நாமல் ராஜபக்ச சரியானவர் அல்ல என தாம் தெரிவித்ததையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து, தேர்தலில் தோற்க விரும்பவில்லை என தொழிலதிபர் தம்மிக்க பெரேரா விலகிக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...