4 கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி கைது

0
163

மூன்று கிலோ 950 கிராம் ஹெரோயினுடன் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கான்ஸ்டபிள் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த 16ம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த ஹெரோயின், நீதிமன்றத்தில் இருந்து திருடப்பட்டதாக பொலீசார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here