இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

Date:

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல.

அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர்.

இந்நிலைமை காரணமாக வர்த்தமானி மூலம் நிறுவனங்கள் ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

நேற்று ஒரு இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய சுமார் 22 இராஜாங்க அமைச்சர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சுக்களின் பொறுப்புகள் தமக்கே வழங்கப்பட்டுள்ளதால், அந்த விடயங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியின் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தமது நிறுவனங்களை வர்த்தமானியில் அறிவித்து தனியான அமைச்சுச் செயலாளர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தயாராக உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...