ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு உள்ளூராட்சி தேர்தல்

Date:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (28) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“தேர்தல் ஆணையம் இன்று கூடியது. வாரம்தோறும் புதன்கிழமை சந்திப்போம். நிர்வாகம் மற்றும் ஒப்புதல் தொடர்பான விஷயங்களை இன்று விவாதித்தோம். நீதிமன்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்து, மற்ற தேர்தல்களில் தலையிடாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வேட்பாளர்கள் சார்பில் ஆணைக்குழு தலையிடாது எனவும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அவர்களே பொறுப்பு எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அனைத்து வேட்பாளர்களினதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...