இலங்கை மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி

Date:

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த 3 தீவுகளின் மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்காக 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பை இலங்கையிடம் இந்தியா நேற்று வழங்கியது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன மற்றும் இலங்கை எரிசக்தி ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் 3 தீவுகளின் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...