இலங்கை மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி

Date:

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த 3 தீவுகளின் மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்காக 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பை இலங்கையிடம் இந்தியா நேற்று வழங்கியது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன மற்றும் இலங்கை எரிசக்தி ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் 3 தீவுகளின் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...