கைது செய்யப்படுவாராகோட்டாபய

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிடுகின்றார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதியின் விலக்குரிமை இல்லாததால், அந்த வழக்குகளை மீண்டும் தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டை வங்குரோத்து செய்ததற்கு கோட்டாபய ராஜபக்ஷவும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.பி. இவற்றை தெரிவித்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...