புதிய கட்டண முறையால் மூடப்படும் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Date:

பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையினால் நாளாந்தம் 400க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின்படி எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் உரிய தொகையை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.

அந்தக் காலத்திற்கு முன்னர் பணம் செலுத்தத் தவறினால், மறுநாள் எரிபொருள் கூடத்தின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதிய அளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் ஒரே நேரத்தில் பெருந்தொகையை வசூலிக்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, புதிய முறைப்படி, எரிபொருள் பெறுவதற்கு முன், அனைத்து பணத்தையும் செலுத்துவது, பல நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...