புதிய கட்டண முறையால் மூடப்படும் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Date:

பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையினால் நாளாந்தம் 400க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின்படி எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் உரிய தொகையை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.

அந்தக் காலத்திற்கு முன்னர் பணம் செலுத்தத் தவறினால், மறுநாள் எரிபொருள் கூடத்தின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதிய அளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் ஒரே நேரத்தில் பெருந்தொகையை வசூலிக்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, புதிய முறைப்படி, எரிபொருள் பெறுவதற்கு முன், அனைத்து பணத்தையும் செலுத்துவது, பல நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...