தேர்தல் சட்டத்தை மீறிய 22 பேர் கைது

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

“தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.

அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம்.

இந்த 173 முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 119 முறைப்பாடுகளும் 54 குற்றவியல் முறைப்பாடுகளும் அடங்கியுள்ளன.

இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 4 தனியார் வாகனங்களும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...