தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை

Date:

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை அளித்த நிலையில் மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகையும் படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

8 பேரின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் முதல் முறையாக எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதே போல் எஞ்சியுள்ள 3 மீனவர்கள் 2 வது முறையாக அத்துமீறி மீன்பிடித்ததான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் 6 மாத சிறை தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் இலங்கை பணம் கட்ட நிபந்தனையுடன் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

விடுதலை செய்யப்பட்ட 5 பேரின் அபராத தொகையை இந்திய துணை தூதரக அதிகாரி அலுவலகம் மூலமாக செலுத்துவதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்ததால் 5 மீனவர்களையும் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்திய பணத்திற்கு தலா ரூ.20,000 ஆக ரூ.1 லட்சம் செலுத்தினால் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இரண்டு, மூன்று தினங்களுக்குள் இந்தியாவுக்குள் வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...