வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

Date:

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் ஒரு ஊழியருக்கு அரை நாள் விடுமுறையும், 40-100 கிலோமீட்டர் தூரம் இருந்தால் 1 நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 100-150 கி.மீ வரை இருந்தால் 1 1/2 நாட்கள் விடுப்பும், 150 கி.மீ.க்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பணியிடங்களுக்குத் திரும்ப மூன்று நாட்கள் ஆகும் சம்பவங்கள் கணிசமான அளவில் இருப்பதாகவும், எனவே அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் எழுத்துப்பூர்வ மூலம் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தொழில் வழங்குனரும் சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் விடுப்பு வழங்கப்படும் காலத்தை குறிக்கும் ஆவணத்தை தயார் செய்து அதனை பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...